வட்டுக்கோட்டை, அராலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அராலி, தோப்பச்சி – வாசிகசாலைக்கு அருகே சென்று கொண்டிருந்த பாண் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டியும், சைக்கிளும் இன்று விபத்துக்குள்ளானது.
இதில் முச்சக்கர வண்டியின் சாரதியும், சைக்கிளில் பயணித்த நபரும் படுகாயமடைந்த நிலையில்,நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.