பாடசாலைக்கு மாணவா்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று கொண்டிருந்த போது நீர்வேலி வில்லுமதவடி பகுதியில் உள்ள திருப்பத்தில் பின்னால் வந்த பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திய தாயும் மகளும் அவருடன் சேர்ந்து பயணித்த மற்றொரு மாணவியும் விழுந்து காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.