Sunday, May 28, 2023
HomeStickerமூன்றே நாட்களில் உங்க முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்

மூன்றே நாட்களில் உங்க முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்

பொதுவாக கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது.

இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம் கோடையில் நொடியில் கருமையாகிவிடும்.

இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், தற்போது பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வருந்துகிறார்கள்.

இதனை எளியமுறையில் ஒரு சில இயற்கை பொருட்கள் கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • உருளைக்கிழங்கு
  • மாதுளை விதைகள்
  • எலுமிச்சை – 1/2

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை நீரில் நன்கு கழுவி, அதன் தோலை சீவி அகற்ற வேண்டும். பின் அதை துருவிக் கொள்ளவும்.

பின் மிக்ஸியில் உருளைக்கிழங்கு, மாதுளை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு கலக்கவும்.

அடுத்து ஐஸ் ட்ரேயில் இந்த கலவையை ஊற்றி நிரப்பி, ஃப்ரீசரில் 5-6 மணிநேரம் வைத்து உறைய வைக்க வேண்டும்.

பிறகு அந்த ஐஸ் கட்டியைக் கொண்டு கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 1-2 ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், மூன்றே நாட்களில் கரும்புள்ளிகள் முற்றிலும் மறைந்துவிடும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments