Sunday, May 28, 2023
HomeStickerடீசல் கையிருப்பு குறித்து வெளியான அறிவித்தல்

டீசல் கையிருப்பு குறித்து வெளியான அறிவித்தல்

நாட்டில் அடுத்த 30 நாட்களுக்கு போதுமான டீசல் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை 22 நாட்களுக்கு போதுமான பெட்ரோலும் இருப்பில் உள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டது. நேற்று நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 4000 மெட்ரிக் தொன் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 3000 மெட்ரிக் தொன் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது.

வாகன இறுதி இலக்கத்திற்கு ஏற்ப எரிபொருள் வழங்கும் திட்டத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக அகில இலங்கை பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருளுக்கான வரிசைகளும் குறைந்து வருவதாக சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஸ தெரிவித்தார்.

இதேவேளை, எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக இலங்கை பெட்ரோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments