Sunday, October 1, 2023
HomeStickerஐந்து பச்சிளம் குழந்தைகளை கொன்ற சைக்கோ தாதி

ஐந்து பச்சிளம் குழந்தைகளை கொன்ற சைக்கோ தாதி

அர்ஜென்டினாவில் ஆரோக்கியமாக பிறந்த பச்சிளம் குழந்தைகளை விஷமருந்து செலுத்திக் கொன்ற விபரீத சைக்கோ தாதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோர்டோபாவின் நியோனாடல் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவித்த 5 பச்சிளம் குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.


இதுகுறித்த புகாரின் பேரில் மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் பிரெண்டா அகுரோ உட்பட 9 பேரை போலிஸார் கைது செய்தனர்.

ஏற்கனவே பிரேண்டா மீது 2 குழந்தைகளை கொன்றதாகக் குற்றச்சாட்டு உள்ள நிலையில்,மேலும் 3 குழந்தைகளின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் நிலுவையில் உள்ளன.

இறந்த குழந்தைகளின் உடலில் அதிகப்படியான பொட்டாசியம் காணப்பட்டதால் அதுவே இறப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்று இந்த வழக்கின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments