ஆளும் தரப்பில் இருந்த பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் இதனை இன்றைய அமர்வில் அறிவித்துள்ளார்.
விசேட உரையொன்றை நிகழ்த்தி அவர் இதனை கூறினார்.

இதன்படி, பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமன, பேராசிரியர் சரித்த ஹேரத், கலாநிதி நாலக்க கொடஹேவா, குணபால ரத்ணசேகர, கலாநிதி உபுல் கலப்பத்தி, திலக் ராஜபக்ஷ, டிலான் பெரேரா, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, கே.பி.எஸ் குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாக எதிர்க்கட்சியில் அமரவுள்ளனர்.