பெட்ரோலிய உற்பத்திகள், எரிபொருள் வழங்கல், விநியோகம் மற்றும் மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், சுகாதார சேவைகள் ஆகியன இன்று முதல் (03) நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதிபரின் ஆணைக்கு அமைய அதிபரின் செயலாளரால் இன்றையதினம் (03) அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
