இனிப்பான மற்றும் சுவையான பழமாக பலாப்பழம் கருதப்படுகிறது.
இருப்பினும் இந்த பழத்தை உட்கொண்ட பிறகு மறந்து கூட சில உணவுகளை நீங்கள் எடுகிக்கொள்ள கூடாது.
அப்படி எடுக்கொண்டால் அவை உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே பலாப்பழத்துடன் எந்த உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள கூடாது என்பதை தெரிந்துகொள்ளவோம்
பலாப்பழம் சாப்பிட்டவுடன், சிலர் இரவில் பால் குடிப்பார்கள், ஆனால் அத்தகையவர்கள் இதுபோன்ற தவறை செய்யக்கூடாது, ஏனெனில் இது உங்கள் ஆரோக்கியத்தை தீங்கு விளைவிக்ககூடும். மேலும் இவை தோல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
பலாப்பழம் சாப்பிட்ட பிறகு தேன் சாப்பிட்டால் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும். தேன் மற்றும் பலாப்பழம் இரண்டுமே இனிப்புச்சுவை கொண்டவை. இரண்டையும் ஒன்றாக சேர்த்து உண்பதால் அது எதிர்விளைவை ஏற்படுத்தும்.

பப்பாளி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால், பலாப்பழம் சாப்பிட்ட பிறகு அதை உட்கொண்டால், அது உங்கள் உடலில் அழற்சியை ஏற்படுத்தும். எனவே, பலாவை சுவைத்த பிறகு குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து பப்பாளியை சாப்பிடலாம்.
பலாவை காயுடன் வெண்டைக்காயை மட்டும் சாப்பிடவேண்டாம். ஏனெனில் பலாப்பழத்துடன் வெண்டைக்காயை உட்கொண்டால், சருமப் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும், எடுத்துக்காட்டாக சருமத்தில் வெண் திட்டுகள் தோன்றலாம்.