Sunday, May 28, 2023
HomeStickerயாழ் மக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!

யாழ் மக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணத்தில் நாளைய தினம்(25) மிகத்தௌிவாக காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நாளை மாலை 5.27 மணியளவில் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இதனை சுமார் 22 செக்கன்கள் வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் எனவும் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.

இலங்கைக்கு பகுதியளவு சூரிய கிரகணமே தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதவிர, ஐரோப்பா, வட ஆபிரிக்கா, ஆசியாவின் மேற்கு பாகம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சூரிய கிரகணம் முழுமையாக தென்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments