Tuesday, March 21, 2023
Homeசெய்திகள்மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல் !

மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல் !

2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு முகம் கொடுத்தால் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதனை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் – 0775687387

மின்னஞ்சல் – consumers@pucsl.gov.lk

தொலைநகல் 0112392641
உயர்தரப் பரீட்சை நடைபெறும் 2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் மின்வெட்டுக்கான ஒப்புதல் வழங்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த காலப்பகுதியிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments