மதுரட்ட பிரதேசத்தின் முதியவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
மதுரட்ட கோபிவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் 73 வயது முதியவர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவரது உடைமைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மதுரட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் தெரிவித்தது
இறந்தவரின் மனைவி வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தபோது இந்த வயோதிபர் வீட்டில் தனிமையில் இருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கை, கால்கள் கட்டப்பட்ட பின்னரே அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.