கனடாவில் கட்டணம் இன்றி கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகைகளை காட்டுத்தீ பரவுகை காரணமாக கடவுச்சீட்டுக்களை தொலைத்தவர்கள் அல்லது கடவுச்சீட்டு சேதமடைந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கனடாவில் குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

வீசா காலத்தை நீடித்தல்
கனடாவில் நிரந்தரமாக பதிவோர் கனடிய பிரஜைகள் மற்றும் தற்காலிக அடிப்படையில் வதிவோர் ஆகிய அனைவருக்கும் இந்த சலுகையின் மூலம் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை சர்வதேச மாணவர்கள் தற்காலிக வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டு பிரஜைகள் காட்டு தீ காரணமாக ஆவணங்களை இழந்திருந்தால் அவர்கள் தங்களுடைய வீசா காலத்தை நீடித்துக்கொள்ள கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.